/* */

சேலம் மாநகராட்சி பகுதிகளில் நாளை காய்ச்சல் கண்டறியும் முகாம்: ஆணையர் தகவல்!

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் நாளை 50 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

சேலம் மாநகராட்சி பகுதிகளில் நாளை காய்ச்சல் கண்டறியும் முகாம்: ஆணையர் தகவல்!
X

சேலம் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ்

சேலம் மாநகராட்சியில் கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சிப் பகுதிகளில் நோய் தொற்று அறிகுறி உள்ளவர்களை வீடு வீடாகச் சென்று கண்டறிந்து அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்கும் வகையில் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் இன்று மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட 48 இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

மாநகராட்சிப் பகுதிகளில் நாளை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை காமிநாயக்கன்பட்டி, பிள்ளையார் கோவில் தெரு, ராமலிங்கம் நகர், சாமிநாதபுரம் மெயின் ரோடு, இ.பி. காலனி, ஜாலி காடு, பச்ச உடையார் காடு, செரி ரோடு, வள்ளுவர் காலனி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், பிற்பகல் 12.00 முதல் 2.00 மணி வரை பள்ளி தெரு, தர்ம நகர், மெய்யன் தெரு, கபிலர் தெரு, மடக்காரன் தெரு, காலிங்க தெரு, ராம் நகர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெறும்.

மேலும்,நண்பகல் 3.00 மணி முதல் 5.00 மணி வரை கல்யாணசுந்தரம் காலனி, அரியாகவுண்டம்பட்டி, வசந்தம் நகர், தெய்வ நாயகம் தெரு, சொர்ணபுரி, கே.எ.எஸ். நகர், கோவிந்த கவுண்டர் தோட்டம், சின்ன சாமி தெரு, வாசகசாலை, நாராயணநகர் ஹசிங்போர்டு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் என நாளை 50 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெறும் என்றும், சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்களை, முகாம் நடைபெறும் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.


Updated On: 13 Jun 2021 2:52 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  2. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  3. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  4. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  5. ஈரோடு
    பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு...
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  9. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  10. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...