/* */

சேலத்தில் எரிந்த நிலையில் பிறந்த ஆண் சிசு: போலீசார் விசாரணை

சேலத்தில் குறைப்பிரசவத்தில் பிறந்த ஆண் சிசுவின் சடலம் எரிந்த நிலையில் மீட்ட காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

HIGHLIGHTS

சேலத்தில் எரிந்த நிலையில் பிறந்த ஆண் சிசு: போலீசார் விசாரணை
X

பச்சிளம் குழந்தையை எரிந்த நிலையில் மீட்டு  விசாரணை நடத்தும் காவல் துறையினர்.

சேலம் அமானி கொண்டலாம்பட்டி காளியம்மன் கோவில்தெரு பகுதியில் சாக்கடை கால்வாயில் குறைப்பிரசவத்தில் பிறந்த ஆண் குழந்தை எரிந்த நிலையில் இருந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அங்கு விரைந்து வந்த கொண்டலாம்பட்டி போலீசார் கால் பகுதி எரிந்த நிலையில் ஆண் குழந்தையின் சடலத்தை சாக்கடை கால்வாயில் இருந்து கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

யார் குழந்தையை குப்பையில் வைத்து எரித்தனர்? என்பது குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியில் குழந்தை சடலம் மீட்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 20 Dec 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  2. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  3. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  4. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  5. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  10. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது