/* */

ஆத்தூர் வட்டாரத்தில் கொட்டித்தீர்த்த மழை: தாழ்வான பகுதிகளில் வெள்ளம்

சேலம் மாவட்டம் ஆத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது; இதனால், தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது.

HIGHLIGHTS

ஆத்தூர் வட்டாரத்தில் கொட்டித்தீர்த்த மழை: தாழ்வான பகுதிகளில் வெள்ளம்
X

வடசென்னிமலையில் வீடு ஒன்றை சூழ்ந்துள்ள மழை வெள்ளம். 

கடந்த சில நாட்களாகவே சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் மழை பெய்வதும், அவ்வப்போது மேகமூட்டமாக காணப்படுவதுமாக வானிலை இருந்து வந்தது.
இந்த சூழலில், சேலம் மாவட்டம் ஆத்தூர், கங்கவல்லி சுற்றுவட்டாரப்பகுதிகளில், இன்று மாலை ஏழு மணியளவில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக, தலைவாசல் தாலுகாவிற்கு உட்பட்ட, வடசென்னிமலை, வளையமாதேவி, காட்டுக்கோட்டை, சதாசிவபுரம், சாத்தப்பாடி, சார்வாய் உள்ளிட்ட பகுதிகளில், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் இந்த மழை நீடித்தது.
இந்த மழையால், தாழ்வான பகுதிகளில் இருந்த குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. ஒரு சில இடங்களில் இடுப்பு அளவுக்கு மழை நீர் தேங்கியது. கனமழையால் ஆத்தூர் நகரில், வாகன நெரிசல் ஏற்பட்டது. தற்போதைய மழையால், சுற்றுப்பகுதியில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி, விவசாயத்திற்கு உதவிகரமாக இருக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Updated On: 16 Nov 2021 4:17 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!