Begin typing your search above and press return to search.
தென் நந்தியாலம் டாஸ்மார்க் கடைத்திருட்டு: 3 பேர் கைது
ஆற்காடு அடுத்து இரத்தினகிரி அருகே உள்ள தென் நந்தியாலம் டாஸ்மார்க் கடை திருட்டு தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்
HIGHLIGHTS
இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த இரத்தினகிரி அருகே உள்ள தென்நந்தியாலம் டாஸ்மாக் கடையில் இம்மாதம் 8,ந்தேதி நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் கடையின் பின்புற சுவற்றை ஓட்டைப் போட்டு மதுபாட்டில்களை திருடிச் சென்றனர்.
இது குறித்து ரத்தினகிரி இன்ஸ்பெக்டர் வினாயகமூர்த்திதலைமையில் ,எஸ் ஐ மகாராஜன் ,எஸ்எஸ்ஐ கார்த்தி மற்றும் போலீஸார் ஆகியோர் கொண்ட குழு குற்றவாளிகளைத் தேடி வந்தபோது சந்தேகத்தின் பேரில் திரிந்த வந்த மூன்று பேரை பிடித்து நடத்திய விசாரணையில் அவர்கள் தான் தென் நந்தியாலம் டாஸ்மாக் கடையில் திருடியவர்கள் என்பது தெரியவந்தது
இதனையடுத்து 3 பேரையும் கைது செய்து அவர்கள் திருடி பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் குறித்து மேலும் போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.