/* */

கிராம சபை கூட்டம் பற்றிய அறிவிப்பு இல்லாததற்கு கிராம மக்கள் எதிர்ப்பு

திமிரி ஊராட்சி ஒன்றியம் தாமரைப்பாக்கம் சிறப்பு கிராம சபை கூட்டம் பற்றி அறிவிப்போ தீர்மானங்களோ இல்லாததற்கு கிராம மக்கள் எதிர்ப்பு

HIGHLIGHTS

கிராம சபை  கூட்டம் பற்றிய அறிவிப்பு இல்லாததற்கு கிராம மக்கள் எதிர்ப்பு
X

இராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஒன்றியத்தைச்சேர்ந்த தாமரைப்பாக்கம் திரௌபதியம்மன் கோயிலில் நடந்த சிறப்பு கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட கிராம மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதில் கிராமத்தில் சிறப்பு கிராம சபை நடத்த உள்ளது என்பது குறித்து ,தண்டோரா,நோட்டிஸ் போன்ற அறிவிப்புகள் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினர். இருப்பினும். கோயிலருகே கூட்டம் கூடியுள்ளதைக் கண்டு வந்ததாகக் கூறினர். .

அதனைத்தொடர்ந்து கிராமமக்கள் தாமரைப்பாக்கம் ஏரிக்கு நீர்வரும் கால்வாயை சரியாக சுத்தம் செய்யவில்லை என்றும் நூறுநாள் வேலை திட்டத்தில் ஏரியை சுத்தம் செய்யவில்லை என்று புகார் கூறினர். மேலும் கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானங்கள் எதுவும் எழுதாமல் கலந்து கொண்டவர்களிடம் கையெழுத்து வாங்கியதாகவும் இதுபற்றி கேள்வி கேட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

இதனால் பலர் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளதாக தாமரைப்பாக்கம் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 27 Nov 2021 7:43 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது