ஆற்காட்டில் மாடியில் இருந்து விழுந்து காயமடைந்த போலீஸ்காரர் பலி

இராணிபேட்டை மாவட்டம், ஆற்காட்டில் மாடிப்படியில் இருந்து கீழே இறங்கும்போது விழுந்து காயமடைந்த போலீஸ்காரர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
ஆற்காட்டில் மாடியில் இருந்து விழுந்து காயமடைந்த போலீஸ்காரர் பலி
X

போலீஸ்காரர் ராதாகிருஷ்ணன்.

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலூக்கா போலீஸ் ஸ்டேஷனில், திருவண்ணாமலை மாவட்டம் மைனந்தல் கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், (45) ,போலீஸ்காரராக பணியாற்றி வந்தார் . அவருக்கு நளினி என்ற மனைவி, 1மகன், 2மகள்கள் உள்ளனர். ராதாகிருஷணன், வேலை நிமித்தமாக ஆற்காடு பூபதி நகரில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவரது மனைவி நளினி, அதே பகுதியில் உள்ள தனியார்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

மனைவி,பிள்ளைகள் பள்ளிக்குச் சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த ராதாகிருஷ்ணன், மாடிக்குச் சென்று கீழே படியில் இறங்கி வந்தபோது திடிரென வழுக்கி விழுந்தார். அதில், அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கிக் கிடந்தார். அக்கம்பக்கத்தினர் உடனே மீட்டு, ஆற்காடுஅரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் ,ராதாகிருஷ்ணன் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஆற்காடு டவுன் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 24 Sep 2021 2:25 PM GMT

Related News

Latest News

  1. தஞ்சாவூர்
    உலக தண்ணீர் நாள் சிறப்பு கிராம சபைக்கூட்டம்: தஞ்சை மாவட்ட ஆட்சியர்...
  2. தமிழ்நாடு
    காஞ்சிபுரம் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம்...
  3. திருச்சிராப்பள்ளி மாநகர்
    உலக தண்ணீர் தினத்தையொட்டி திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  4. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் சத்து மாவு: காய்கறி, பழங்களில்...
  5. புதுக்கோட்டை
    உலக தண்ணீர் நாளை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக்கூட்டம்
  6. தேனி
    தமிழ் மொழி ஆர்வலர்கள் கவனிப்பார்களா?. இணையத்தில் பின்தங்கிய தமிழ்...
  7. சேலம் மாநகர்
    தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
  8. மேலூர்
    மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
  9. குமாரபாளையம்
    தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    பெண் போலீசாரின் சைக்கிள் பேரணிக்கு திருச்சியில் வரவேற்பு