/* */

1971 போரில் கலந்து கொண்ட வீரர்களின் வீடுகளுக்கு சென்ற வெற்றி சுடர்

1971 போரில் கலந்து கொண்ட வீரர்களின் வீடுகளுக்கு சென்ற வெற்றி சுடருக்கு உணர்ச்சி பூர்வ மரியாதை செலுத்திய முன்னாள் ராணுவ வீரர்

HIGHLIGHTS

1971 போரில் கலந்து கொண்ட வீரர்களின் வீடுகளுக்கு சென்ற வெற்றி சுடர்
X

ராணுவவீரரின் வீட்டுக்கு வந்த வெற்றி சுடர்  

இந்தியா பாகிஸ்தான் நாடுகளிடையே கடந்த 1971ம் ஆண்டு நடைபெற்ற போரில் இந்தியா வெற்றி பெற்றது. போரில் வெற்றி பெற்று 50ஆண்டு நிறைவு பெற்றதை கொண்டாடும் விதமாக கடந்தாண்டு டிசம்பர் 16ம் தேதி பிரதமர் மோடி வெற்றி ஜோதியை ஏற்றி வைத்தார். நாட்டின் வெற்றிக்காக பாடுபட்ட வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக ஏற்றப்பட்ட நினைவு சுடர் போரில் கலந்து கொண்ட வீரர்களின் சொந்த ஊர்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கட்டபொம்மன் கடற்படை தளத்திலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி கடற்படை தளத்திற்கு நேற்று நினைவுச்சுடர் வந்தது. தொடர்ந்து அன்றைய போரில் கலந்து கொண்ட ராணுவ வீரர்கள் வீடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ராமநாதபுரம் பட்டிணம் காத்தான் பகுதியில் உள்ள ஓய்வு பெற்ற விமானப்படை வீரர் ராமசாமி மற்றும் வசந்தவேணி நாச்சியார் நகரில் வசிக்கும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ராமையா ஆகியோர் வீடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. ஓய்வு பெற்ற ராணு வீரர்களின் குடும்பத்தினர் வெற்றிசுடருக்கு மலர் தூவி, வணங்கி மரியாதை செலுத்தினர். நாளை காலை இந்திய எல்லையான தனுஷ்கோடி, மற்றும் ராமேஸ்வரம், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மணி மண்டபத்தற்கும் கொண்டு செல்லப்பட உள்ளது. 16ம் தேதி மாலை உச்சிப்புளியிலிருந்து மதுரை எடுத்துச் செல்ல உள்ளதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 14 July 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  3. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  7. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
  8. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  9. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களில் புத்தகத் தின விழா
  10. ஈரோடு
    ஈரோடு: ரெப்கோ வீட்டுக் கடன் சிறப்பு முகாம்