Begin typing your search above and press return to search.
இராமநாதபுரம் அருகே கஞ்சா எண்ணெய் முதல் முறையாக பறிமுதல்
இராமநாதபுரம் அருகே பசும்பொன் ரயில்வே கேட்டில் கஞ்சா எண்ணெயை போலீசார் பறிமுதல் செய்தனர்.
HIGHLIGHTS
இராமநாதபுரம் அருகே பசும்பொன் நகர் ரயில்வே கேட் பகுதியில் சந்தேகப் படும்படி இருந்த திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த செபிக் என்பவரை இராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது இலங்கைக்கு கடத்துவதற்காக வைத்திருந்த சுமார் 1.54 கிலோ மதிப்புள்ள கஞ்சாவில் இருந்து பிரித்து எடுக்கும் ஆசிஸ் என்னும் கஞ்சா எண்ணெய் பறிமுதல் செய்து செபிகை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய ஏர்வாடி பகுதியைச் சேர்ந்த முகமது ஜாவித், ரகுமான் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். ஒரே நாளில் வைரக் கற்கள் மற்றும் கஞ்சா எண்ணெய் பறிமுதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீடி, சிகரெட் புகை குழாய் ஆகியவைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.