/* */

முத்துராமலிங்கத்தேவர் குரு பூஜை விழா: முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆய்வு

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குரு பூஜை விழாவையொட்டி முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்(பொ) நேரில் ஆய்வு

HIGHLIGHTS

முத்துராமலிங்கத்தேவர் குரு பூஜை விழா: முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆய்வு
X

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குரு பூஜை விழாவையொட்டி முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்(பொ) நேரில் ஆய்வு செய்தார்.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குரு பூஜை விழாவையொட்டி பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்(பொ) நேரில் ஆய்வு.

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத்தேவரின் நினைவிடத்தில் அக்.30 ல் 59வது குருபூஜை விழா, 114 வது ஜெயந்தி விழா நடைபெற உள்ளது. அக்டோபர் 28 ,29, 30 ஆகிய மூன்று நாட்களில் பசும்பொன் கிராமத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த அரசியல் கட்சி பிரமுகர்கள், சமுதாய தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வருவது வழக்கம்.

அதன் அடிப்படையில் இந்த ஆண்டு அஞ்சலி செலுத்த வரும் பொதுமக்களுக்கு வாகனம் நிறுத்தவும், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் கழிவறை, சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரவும், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து இன்று பசும்பொன் கிராமத்தில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்(பொ) காமாட்சி கணேசன் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்பு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடம் முன்பு உள்ள தியான மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்தும், கொரோனாபரவல் காரணமாக அரசு விதித்துள்ள வழிகாட்டு நெறி முறைகளை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் பிரவீன் குமார், பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் முருகன் உள்பட அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 13 Oct 2021 5:56 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது