பேருந்து நிலைய மார்க்கெட்டில் போலீஸ் எஸ்பி ஆய்வு
புதுக்கோட்டையில் காய்கறி மார்க்கெட் இன்று முதல் பேருந்து நிலையத்தில் செயல்படுகிறது. இதனை போலீஸ் எஸ்பி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
HIGHLIGHTS
பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் விதமாக புதுக்கோட்டை அனுமன் கோவில் சந்து பகுதியில் இயங்கி வந்த காய்கனி மார்க்கெட் இடம் மாற்றம் செய்யப்படடது.
பொது மக்களின் நலன் கருதியும் வியாபாரிகள் நலன் கருதியும் பொதுமக்களின் அதிகம் கூட்டத்தை தவிர்க்க விதமாகவும் தற்பொழுது புதிய பேருந்து நிலையத்தில் இன்று முதல் காய்கனி வியாபாரம் செய்து வருகின்றனர்
இதனை புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் காலையில் ஆய்வு செய்தனர் அப்போது பத்துக்கும் மேற்பட்ட காய்கனி கடைகளில் அளவுக்கு அதிகமாக கூட்டமாக வியாபாரம் செய்ததை பாரத்த்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்திற்கும் மேற்பட்ட கடைகளுக்கு அபராதம் விதித்து கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் இதுபோன்ற சமூக இடைவெளி பின்பற்றாமல் கடைகளில் அதிகமாக கூட்டம் சேர்த்து வியாபாரம் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தது சென்றனர்.