/* */

புதுக்கோட்டையில் இரவில் கொட்டி தீர்த்த மழையால் போக்குவரத்து பாதிப்பு

மழையால் சாலைகளில் ஏற்பட்ட பள்ளங்களில் வாகன ஓட்டிகள் விழுந்து செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் இரவில் கொட்டி தீர்த்த   மழையால்   போக்குவரத்து பாதிப்பு
X

புதுக்கோட்டை பழனியப்பா கார்னர் சாலையில் புரண்டோடும் மழை  நீர்

புதுக்கோட்டையில் இரவு நேரத்தில் கொட்டி தீர்த்த கன மழையால் நகரப் பகுதியில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வடகிழக்கு பருவமழை துவங்கியது அடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து பத்து நாட்களுக்கு மேலாக பலத்த மழை பெய்து வந்த நிலையில் இன்று காலையில் இருந்து மிதமான வெயில் அடித்து வந்த நிலையில் மாலை நேரத்தில் இரண்டு மணி நேரங்களாக வெளுத்து வாங்கிய பலத்த மழையினால் புதுக்கோட்டை பிருந்தாவனம் பறையனார் அடப்பன்வயல் கீழராஜவீதி மேல ராஜவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்து கொண்டது.

இந்நிலையில் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து கொண்டிருந்த மழையால் சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்து சாலையில் உள்ள பள்ளங்களில் விழுந்து செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது.தொடர்ந்து மழை காலம் என்பதால் நகராட்சி நிர்வாகம் உரிய முறையில் வரத்து வரிகளில் தூர்வாரி மழை நீர் செல்வதற்கு வழி வகை செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Updated On: 17 Nov 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?