புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தேமுதிக மாவட்ட செயலாளராக கார்த்திக் அறிவிப்பு
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தேமுதிக செயலராக கார்த்திக் என்பவரை அக்கட்சித்தலைமை அறிவித்துள்ளது
HIGHLIGHTS
புதுக்கோட்டை வடக்கு மாவட்டதேமுதிக மாவட்ட செயலாளராக கார்த்திக் தலைமை கழகம் அறிவிப்பு.
தமிழகம் முழுவதும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிர்வாகிகள் பல்வேறு மாவட்டங்களில் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டு வந்தனர்.
அதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்திலும் மாவட்ட செயலாளராக பணியாற்றிய ஒரு சிலர் கட்சி பணியை சிறப்பாக செய்ய வில்லை என கட்சி நிர்வாகிகள் இடத்தில் இருந்து வந்த புகாரை அடுத்து ஏற்கனவே மாவட்ட செயலாளராக பணியாற்றி வந்த சுப்பிரமணியன் அதிரடியாக நீக்கப்பட்டு புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை வடக்கு மாவட்டச் செயலாளராக அறிவித்து தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த் இன்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதனை அடுத்து புதிதாக பொறுப்பேற்ற வடக்கு மாவட்ட செயலாளர் கார்த்திக் தலைமையில் புதுக்கோட்டை எம்ஜிஆர் சிலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பட்டாசுகள் வெடித்து கட்சி நிர்வாகிகள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.இந்த நிகழ்வில் தேமுதிக உயர்மட்டக்குழு ஜாஹிர், தெற்கு மாவட்ட செயலாளர் மன்மதன், முன்னாள் மாவட்ட செயலாளர் செல்வின் ராஜ் மற்றும் நிர்வாகிகள் பரமஜோதி, துரைராஜ், புஷ்பராஜ், மாரிமுத்து, மகாலிங்கம், சாமிகண்ணு உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்