/* */

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு

சிவகங்கை மாவட்ட எல்லையான பூலாங்குறிச்சி அரசு கலைக்கல்லூரிக்கு சென்று வர பேருந்து வசதி செய்ய வேண்டும்

HIGHLIGHTS

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர்  ஆட்சியரிடம் மனு
X

இந்திய மாணவர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்

இந்திய மாணவர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று இந்திய மாணவர் சங்கம் சார்பில், புதுக்கோட்டை டவுன் ஹால் அருகே உள்ள அரசு உயர் துவக்கப்பள்ளியில் 870க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பள்ளியில் படித்து வருகின்றனர். தற்போது பள்ளியில் போதிய வகுப்பறைகள் மற்றும் ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளது. இதனால் கல்வி கற்பதில் மாணவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர் .

இதனைக் கருத்தில் கொண்டு, அப்பள்ளியில் மாணவர்களுக்கு போதிய இடவசதியும் கூடுதல் ஆசிரியர்களை நியமித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், புதுக்கோட்டை- சிவகங்கை மாவட்ட எல்லையான பூலாங்குறிச்சி பகுதியில் இயங்கி வரும் அரசு கலைக்கல்லூரியில், புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்லூரியில் படித்து வருகின்றனர். அந்கக்கல்லூரிக்கு மாணவ மாணவிகள் சென்று வர அரசு பேருந்தை இயக்க வேண்டும் என வலியுறுத்தியும் இன்று ஆட்சியர் அலுவலகத்துக்கு, பத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் திரண்டு வந்து கோரிக்கை மனு அளித்தனர்.

Updated On: 26 Nov 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  6. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  7. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  8. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  10. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்