/* */

நடப்பு சம்பா பருவத்தில் நெல் மற்றும் இதர பயிர்கள் 1,85,963 ஏக்கரில் சாகுபடி

விவசாயிகளுக்கு தட்டுபாடின்றி உரங்கள் மற்றும் விதைகள் கிடைக்க இருப்பு வைக்கப்பட்டுள்ளதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்

HIGHLIGHTS

நடப்பு சம்பா பருவத்தில் நெல் மற்றும் இதர பயிர்கள் 1,85,963 ஏக்கரில் சாகுபடி
X

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் திட்டப் பணிகள் குறித்து, வேளாண்மை இயக்குநர் ஆ.அண்ணாதுரை, மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு முன்னிலையில் அலுவலர்களுடன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் திட்டப் பணிகள் குறித்து, வேளாண்மை இயக்குநர் ஆ.அண்ணாதுரை, மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு முன்னிலையில் அலுவலர்களுடன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் சாகுபடி பரப்பு 1,85,963 ஏக்கர் மற்றும் இதர பயிர்களின் சாகுபடி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்கு தேவையான விதைகள் மற்றும் உரம் இருப்பு ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தற்போது சம்பா சாகுபடிக்கு தேவையான உரங்கள் யூரியா- 3779 மெட்ரிக் டன், டிஏபி-988 மெட்ரிக் டன், பொட்டாஸ்- 916 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ்- 4805 மெட்ரிக் டன் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருவது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

விவசாயிகளுக்கு தட்டுபாடின்றி உரங்கள் மற்றும் விதைகள் கிடைக்க இருப்பு வைக்கப்பட்டுள்ளதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என வேளாண்மை இயக்குநர் அறிவுறுத்தினார்.மேலும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் 120 கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு மற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இடுபொருட்கள் குறித்தும் விரிவாக வேளாண் இயக்குநர் ஆய்வு மேற்கொண்டார்.

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் சிறப்பு பருவத்தில் நெல் சம்பா சாகுபடி செய்துள்ள 1,85,963 ஏக்கரில், 1,74,624 ஏக்கரில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் வேளாண் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் விவசாயிக ளுக்கு முழுமையாக சென்று சேரும் வகையில் அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என வேளாண் இயக்குநர் ஆ.அண்ணாதுரை அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், வேளாண் இணை இயக்குநர், மா.பெரியசாமி, வேளாண் துணை இயக்குநர்கள்வி.எம்.ரவிச்சந்திரன் (மத்திய அரசுத் திட்டம்), இரா.மோகன்ராஜ் (மாநிலத் திட்டம்), வேளாண் உதவி இயக்குநர்கள் மு.மதியழகன் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு), ச.கிருஷ்ணமூர்த்தி (பயிர் காப்பீடு) ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 26 Nov 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  2. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  3. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  6. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  7. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  8. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வாழை இலை பரோட்டா செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    இளைஞர்களின் இன்னொரு தோழன், பைக்..!