புதுக்கோட்டையில் நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்க பெயர் பலகை திறப்பு
புதுக்கோட்டையில் நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்க பெயர் பலகையை மாநில பொதுச்செயலாளர் தாமோதரன் திறந்து வைத்தார்.
HIGHLIGHTS
புதுக்கோட்டை நகராட்சி அலுவலகம் அருகில் தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கத்தின் புதுக்கோட்டை கிளை சார்பில் கொடியேற்று விழா மற்றும் தகவல் பலகை திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு சங்கத்தின் கிளை தலைவர் மணிவண்ணன் தலைமை வகித்தார். கிளை செயலாளர் தமிழ்செல்வன் வரவேற்புரையாற்றினார்.
இதில் சங்க மாநில துணைத்தலைவர்கள் சிவசுப்பிரமணியன் நைனாமுகமது மற்றும் சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் முருகேசன் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மாநிலச் செயலாளர் ஹேமலதா மற்றும் மாநில பொதுச்செயலாளர் தாமோதரன் ஆகியோர் கலந்துகொண்டு சங்கத்தின் கொடி மற்றும் தகவல் பலகையைத் திறந்து வைத்து சிறப்பித்தனர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய மாநில பொதுச்செயலாளர் தாமோதரன் கூறுகையில்
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்ற நகராட்சி மாநகராட்சி, பேரூராட்சி உறுப்பினர்களுடன் சேர்ந்து நாங்கள் பணியாற்ற தயாராக இருக்கின்றோம்.மக்களுக்காக அவர்கள் பணியாற்றுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மேலும் புதிதாக உருவாக்கப்பட்ட பல்வேறு நகராட்சி, மற்றும் மாநகராட்சியில் ஆணையர் பதவியை தவிர மற்ற பதவிகள் எதுவும் நிரப்பப்படாமல் இருப்பதால் மக்களுக்கான பணி செய்வது மிகுந்த சிரமமாக இருக்கிறது.
எனவே தமிழகம் முழுவதும் நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட பல்வேறு அரசு சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.