Begin typing your search above and press return to search.
புதுக்கோட்டையில் நீத்தார் நினைவு தூணுக்கு தீயணைப்பு வீரர்கள் அஞ்சலி
புதுக்கோட்டையில் நீத்தார் நினைவு தூணுக்கு தீயணைப்பு வீரர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
HIGHLIGHTS
புதுக்கோட்டையில் நீத்தார் நினைவு தூணுக்கு தீயணைப்பு வீரர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி.
தமிழகம் முழுவதும் இன்று தீத்தடுப்பு நிகழ்ச்சியின் போது உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14ஆம் தேதி நீத்தார் நினைவு நாளாக அனுசரிக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு இன்று நீத்தார் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.
புதுக்கோட்டை தீயணைப்பு நிலையத்தில் உள்ள நீத்தார் நினைவுத் தூணுக்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் பானுப்பிரியா உதவி மாவட்ட அலுவலர் கார்த்திகேயன் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதன் பின்னர் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.