/* */

வனத்தோட்டக்கழக மண்டல மேலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

தமிழ்நாடு வனத்தோட்டக் கழக மண்டல மேலாளர் நேசமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

HIGHLIGHTS

தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம் மண்டல மேலாளராக, விழுப்புரத்தில் பணியாற்றி வரும் நேசமணியின் அலுவலகத்தில், நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். இதில், ரூ 36 லட்சம் கைப்பற்றிய நிலையில், இன்று புதுக்கோட்டையில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்

நேசமணியின் புதுக்கோட்டையில் உள்ள அவரது வீட்டில், புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி இமயவர்மன் தலைமையில் ஆய்வாளர்கள் ஜவகர் மற்றும் பீட்டர் ஆகியோர் முன்னிலையில், 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்

வீட்டில் உள்ள கோப்புகளை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்தனர். அப்போது, பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. சோதனையின் போது, மண்டல மேலாளர் நேசமணியும் வீட்டில் உள்ளார். அவரிடமும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பல கிடுக்கிபிடி கேள்விகளை கேட்டு வருகின்றனர். சோதனை முடிந்த பிறகே என்னனென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது என்பது குறித்த விவரம் தெரியவரும்.

Updated On: 12 Oct 2021 11:07 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  8. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  10. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!