/* */

துணை வட்டாட்சியர் காலி பணியிடத்தை நிரப்ப கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம்

குளத்தூரில் துணை வட்டாட்சியர் காலி பணியிடத்தை நிரப்ப வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

HIGHLIGHTS

துணை வட்டாட்சியர் காலி பணியிடத்தை நிரப்ப கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட குளத்தூர் வட்டாட்சியர் பெரியநாயகி.

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா அலுவலகத்தில் துணை வட்டாட்சியர் காலி பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது. வருவாய் ஆய்வாளர், நில அளவையர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம பணியாளர்களுடைய பணிகள் மற்றும் வருவாய் வரிவசூல், கடன் வசூல் மற்றும் கிராம கணக்குகளை தணிக்கையிடுதல், ஏ மற்றும் பி மெமோ இனங்களை தணிக்கையிட்டு வெளியேற்று நடவடிக்கைக்கான ஆணைகளைப் பிறப்பித்தல் உட்பட பல்வேறு பொறுப்புகளில் இருக்கக்கூடிய துணை வட்டாட்சியரின் பணி நிரப்பபடாமல் இப்பணிகள் அனைத்தும் நிலுவையில் உள்ளன.

இதனால், இப்பணியை உடனடியாக நிரப்ப கோரி,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குளத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு செயலாளர் சிதம்பரம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர், குளத்தூர் வட்டாட்சியர் பெரியநாயகி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதனால் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பாதியிலேயே ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Updated On: 26 July 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  2. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  3. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  4. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  5. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  6. ஆவடி
    போதையில் இளைஞர்கள் தகராறு : தட்டிக் கேட்டவர்களுக்கு அரிவாள் வெட்டு..!...
  7. கவுண்டம்பாளையம்
    கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை
  8. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  9. ஆவடி
    இஸ்கான் அமைப்பின் கவுர நிதாய் ரத யாத்திரை..!
  10. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...