/* */

கந்தர்வகோட்டையில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி: பொதுமக்கள் பங்கேற்பு

கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது

HIGHLIGHTS

கந்தர்வகோட்டையில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி: பொதுமக்கள் பங்கேற்பு
X

கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் கை கழுவுதல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பெண்கள்.

கொரோனா 3வது அலை தொற்றை வர விடாமல் கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட பெண் பணியாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரம் செய்தனர். அப்போது சமூக இடைவெளியை பின்பற்றி நடனமாடி, பாட்டு பாடி, உறுதிமொழி எடுத்தும் பொதுமக்கள் வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்கு நுழையும் முன்பு எவ்வாறு கைகளை தேய்த்து கழுவ வேண்டும் என்றும், வெளியும் செல்லும் பொதுமக்கள் கட்டாயமாக தங்களது உயிர்களை பாதுகாக்கும் விதத்தில் முககவசம் அணிய வேண்டும். அதேபோல் பொதுமக்களுக்கு பாட்டுப்பாடி நடனமாடி பேருந்து நிலையத்தில் அமர்ந்திருக்கும் பொதுமக்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் கந்தர்வகோட்டை வட்டாட்சியர் புவியரசன் மற்றும் ஏராளமான கிராம நிர்வாக அலுவலர்கள், காவல்துறையினர் , ஊராட்சி மன்ற தலைவர், திமுக ஒன்றிய கவுன்சிலர், திமுக நகர செயலாளர் மற்றும் ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டு கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் உறுதிமொழி எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


Updated On: 2 Aug 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  6. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  7. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  9. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்