/* */

பெரம்பலூர் அருகே சமூக நீதி மனித உரிமைகள் குறித்து போலீசார் விழிப்புணர்வு

பெரம்பலூர் அருகே பேரளி கிராமத்தில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

HIGHLIGHTS

பெரம்பலூர் அருகே சமூக நீதி மனித உரிமைகள் குறித்து போலீசார் விழிப்புணர்வு
X

பெரம்பலூர் அருகே பேரளி கிராமத்தில் போலீசார் மனித உரிமைகள் பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் சரவணசுந்தர் உத்தரவின் பேரில் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி மேற்பார்வையில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் எம்.எஸ்.எம்.வளவன் மற்றும் அவரது குழுவினர்கள் இணைந்து பெரம்பலூர் மாவட்டம் பேரளி கிராமத்தில் வசிக்கும் பொது மக்களிடம் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் பொது மக்களிடம் பேசிய துணைக் காவல் கண்காணிப்பாளர் சமூகத்தில் உள்ள அனைவரும் சமம் என்றும், ஒருவர் ஒருவரிடம் பேசும் போது சகோதர சகோதரிகள் உணர்வோடு பேச வேண்டும் எனவும் கூறினார்.

மேலும் உங்கள் இருப்பிட பகுதியில் உள்ள கடைகளில் இரட்டை டம்ளர் முறை இருந்தால் கண்டிப்பாக தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

Updated On: 5 Jan 2022 4:19 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது