/* */

குன்னூர் அருகே கூலித் தொழிலாளர்கள் சென்ற வாகனம் விபத்து

மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் வீடு திரும்பினர் இதுகுறித்து லவ்டேல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

குன்னூர் அருகே கூலித் தொழிலாளர்கள் சென்ற வாகனம் விபத்து
X

விபத்துக்குள்ளான வாகனம்.

குன்னூர் அருகே முட்டிநாடு பகுதியில் விவசாயி அருணாச்சலம் தோட்டத்தில் விவசாய பணிக்காக தொழிலாளர்கள் ஒரு ஜீப்பில் சென்றனர். மழையால் சேறாகி இருந்த காளான் கழிவுகளில் திடீரென வழுக்கி எதிர்பாராத விதமாக தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. உடனே அக்கம் பக்கத்தினர் காயம் அடைந்த தொழிலாளர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொழிலாளர்கள் சாந்தி (வயது 55), முத்துலட்சுமி (35), புஷ்பராணி (50), சரஸ்வதி (44), யசோதா (40), கவிதா (40), லதா (54) ஆகிய 7 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் வீடு திரும்பினர். இதுகுறித்து லவ்டேல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 16 Nov 2021 5:15 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
  2. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  3. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  4. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  5. ஈரோடு
    ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் மாநில கைப்பந்து முகாம் நிறைவு விழா
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் பொதுமக்களுக்கு இலவசமாக மோர் வழங்கிய போலீசார்
  7. வீடியோ
    🔥உனக்கு 24-மணிநேரம்தான் Time விஜயபாஸ்கர் மிரட்டல்🔥|மோதிக்கொண்ட...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் 'கூல்' ஆக இருப்பது எப்படி?
  9. திருவள்ளூர்
    அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
  10. ஆவடி
    ஆவடி அருகே நகைக்கடையில் கொள்ளை: கொள்ளையர்களுக்கு உதவிய இருவர் கைது