/* */

பந்திப்பூர் சாலையில் உலா வந்த புலி: வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் அறிவுரை

பந்திப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடந்த புலியை வாகன ஓட்டி அச்சத்துடன் படம் பிடித்துள்ளார்

HIGHLIGHTS

பந்திப்பூர் சாலையில் உலா வந்த புலி: வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் அறிவுரை
X

பந்திப்பூர் அருகே சுமார் எட்டு வயது மதிக்கத்தக்க புலி வனப்பகுதி ஒட்டியுள்ள சாலையில் உலா வந்து சாலையை கடந்து சென்றது.

வனப்பகுதியில் நிலவும் வறட்சி காரணமாக வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி சாலையோர வனப்பகுதியில் நடமாடுவது வாடிக்கையாக உள்ள நிலையில், நேற்று இரவு சுமார் 8வயது மதிக்கத்தக்க புலி சாலையில் உலா வந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் பனிக்காலம் முடிந்து தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் முதுமலை, தெப்பக்காடு போன்ற பகுதிகளில் உள்ள வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. சமீப காலமாக சாலையில் புலிகள் உலா வரும் வீடியோ சுற்றுலா பயணிகள் கைப்பேசி மூலம் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வைரலாகிய நிலையில், நேற்று இரவு மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பந்திப்பூர் அருகே சுமார் எட்டு வயது மதிக்கத்தக்க புலி வனப்பகுதி ஒட்டியுள்ள சாலையில் உலா வந்து சாலையை கடந்து சென்றது.

இந்த காட்சியை அவ்வழியாக பயணித்த சுற்றுலா பயணி தனது கைப்பேசி மூலம் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு தற்போது வைரலாகி வருகிறது. மேலும் இரவு நேரங்களில் முதுமலை, தெப்பக்காடு, மைசூர் செல்லும் சாலையில் பயணம் மேற்க் கொள்வோர் மிகவும் கவனமுடன் பயணிக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Updated On: 31 March 2022 5:28 AM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  2. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  3. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  5. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  6. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  7. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  8. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  9. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  10. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!