/* */

வனப்பகுதியில் தீ வைத்தால் கடும் நடவடிக்கை: வனத்துறை எச்சரிக்கை

தீ வைப்பது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வனப்பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

HIGHLIGHTS

வனப்பகுதியில் தீ வைத்தால் கடும் நடவடிக்கை: வனத்துறை எச்சரிக்கை
X

நீலகிரி வனக்கோட்டத்தில் வனப்பகுதியில் தீ வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை உறைபனி தாக்கம் காணப்பட்டது. நடப்பு மாதம் உறைபனி தாக்கம் இல்லாமல் நீர் பணி தாக்கம் இருந்து வருகிறது.

மழை பெய்யவில்லை தற்போது கோடைகாலம் என்பதால் பகலில் வெயில் வாட்டி வதைக்கிறது. வறட்சியான நிலை காணப்படுவதால் வனப்பகுதிகளில் உள்ள புற்கள் செடி கொடிகள் காய்ந்து கருகிய நிலையில் உள்ளது. இதனால் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது. எனவே வனப்பகுதியில் தீப்பிடிப்பது தடுக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் வனப்பகுதியை ஒட்டியுள்ள சாலை ஓரத்தில் எக்காரணத்தைக் கொண்டும் சமையல் செய்யக்கூடாது எனவும் அத்துடன் காட்டை ஒட்டிய பகுதியில் இருப்பவர்கள் குப்பைகளை வைக்கக் கூடாது. இதுதொடர்பாக கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது ஆகவும் கண்காணிப்பில் யாராவது வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியிலோ அல்லது வனப்பகுதியில் தீ வைப்பது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வனப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 14 March 2022 11:56 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  2. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  3. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  4. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  5. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  6. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  8. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  9. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  10. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...