Begin typing your search above and press return to search.
இன்று யானைகள் தினத்தன்று கூடலூரில் மின்வேலியில் சிக்கி ஆண் யானை பலி
பந்தலூரில் தனியார் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி 4 வயது மதிக்கதக்க ஆண் யானை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
HIGHLIGHTS
நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக வனவிலங்குகள் மின்வேலியில் சிக்கி இறக்கும் சம்பவம் அரங்கேறி வருகிறது.
இந்நிலையில் பந்தலூர் அருகே உள்ள அய்யங்கொல்லி தட்டாம்பாறை பழங்குடியின கிராமப் பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் ஆண் காட்டு யானை ஒன்று இறந்து கிடந்துள்ளது.
காட்டு யானை இறந்து கிடந்ததை கண்ட கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தை உறுதி செய்து தனியார் தோட்ட உரிமையாளர் சாஜூவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உலக யானைகள் தினமான இன்று யானை ஒன்று மின்வேலியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் யானை ஆர்வலர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.