/* */

கூடலூரில் மீண்டும் யானைகள் நடமாட்டம் - மக்கள் பீதி

கூடலூர் அருகே உள்ள செளுக்காடி பகுதியில் தினமும் 2 காட்டுயானைகள் திரிந்து கொண்டிருப்பதால், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள செளுக்காடி பகுதியில் தினமும் 2 காட்டுயானைகள் நடமாடி வருகின்றன அந்த யானைகளை விரட்டக்கோரி, பொதுமக்கள் திரண்டு போராட்டம் நடத்த முயன்றனர். அப்போது, காட்டு யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, வனத்துறையினர் உறுதிஅளித்தனர்.

அதன்படி, அங்குள்ள தனியார் தோட்டத்தில் புகுந்த ஒரு காட்டுயானையை, வனச்சரகர் கணேசன் தலைமையில் வனவர் செல்லதுரை, வனக்காப்பாளர் பிரகாஷ்மற்றும் வனத்துறையினர் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் மாக்கமூலா பகுதியில், மாலை 3 மணிக்கு மற்றொரு காட்டுயானை புகுந்தது. அது, கூடலூர்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் உலா வந்தது. இதனால், 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது தவிர, கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் தட்டப்பள்ளம் அருகே காட்டுயானை சுற்றித்திரிந்தது. அவ்வப்போது சாலையையும் கடக்க முயன்றது. அப்போது சிலர், ஆபத்தை உணராமல், காட்டுயானையை செல்போனில் புகைப்படம் மட்டும் வீடியோ எடுத்தனர். அவர்களை வனத்துறையினர் எச்சரிக்கை அனுப்பினர்.

Updated On: 29 Jun 2021 3:21 PM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  2. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  3. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  4. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  5. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  6. ஆவடி
    போதையில் இளைஞர்கள் தகராறு : தட்டிக் கேட்டவர்களுக்கு அரிவாள் வெட்டு..!...
  7. கவுண்டம்பாளையம்
    கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை
  8. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  9. ஆவடி
    இஸ்கான் அமைப்பின் கவுர நிதாய் ரத யாத்திரை..!
  10. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...