/* */

எலச்சிபாளையம் அருகே மகள் காதலனுடன் சென்றதால் விரக்தி: தாய் தற்கொலை

எலச்சிபாளையம் அருகே மகள் காதலனுடன் சென்றதால் ஏற்பட்ட விரக்தியில், தாய் தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

எலச்சிபாளையம் அருகே மகள் காதலனுடன்  சென்றதால் விரக்தி: தாய் தற்கொலை
X

பார்வதி

எடப்பாடி அருகே உள்ள வீரப்பம்பாளையத்தை சேர்ந்தவர் குமார் (45). இவர் எலச்சிபாளையம் ஒன்றியம் நெய்க்காரம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்குவாரியில், குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பார்வதி (40). இவர்களுக்கு கலை பிரியா (19) என்ற மகளும், சந்தோஷ் (17) என்ற மகனும் உள்ளனர்.

கல்குவாரிக்கு வரும் டிரைவர் ஒருவருடன், பார்வதியின் மகள் கலை பிரியாவுக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. தகவல் அறிந்த குமார் மற்றும் பார்வதி ஆகியோர், மகளிடம் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டிரைவரை காதலிக்க வேண்டாம் என்று வற்புறுத்தியுள்ளனர். பெற்றோரின் பேச்சை கேட்காமல், கலைபிரியா தொடர்ந்து காதலித்து வந்துள்ளார். மேலும் அவரை திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், கடந்த 23-ந் தேதி கலைபிரியா திடீரென காணாமல் போய்விட்டார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. மகள் காதலனுடன் சென்றிருப்பார் என்று நினைத்த பார்வதி, மனமுடைந்து. கல்குவாரியில் உள்ள 50 அடி ஆழ குட்டையில், தண்ணீரில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் கிடைத்ததும், எலச்சிபாளையம் போலீசார், சடலத்தை மீட்டனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 26 Jan 2022 12:00 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு