/* */

குழந்தை திருமணத் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி: எஸ்.பி பங்கேற்பு

கொல்லிமலை பகுதிகளில் நடைபெற்ற குழந்தை திருமணத் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை, மாவட்ட எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

குழந்தை திருமணத் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி: எஸ்.பி பங்கேற்பு
X

கொல்லிமலை வயநாடு பஞ்சாயத்து பகுதியில், குழந்தை திருமணம் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நாமக்கல் எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் தொடங்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை, பைல்நாடு பஞ்சாயத்து, மேக்கினிக்காடு கிராமத்தில், குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் டிஎஸ்பி சுரேஷ் தலைமை வகித்தார். மாவட்டஎஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது: கொல்லிமலையில் அதிகளவில் குழந்தை திருமணங்கள் நடைபெற்று வருகிறது. இதனை முற்றிலும் மலைவாழ் மக்கள் நிறுத்த வேண்டும். பெண் குழந்தைகளுக்கு, 18 வயதுக்குமேல்தான் திருமணம் செய்து வைக்க வேண்டும். அந்தந்த பகுதியில் படித்த இளைஞர்கள், இதுகுறித்து மக்களிடம் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதுபோன்ற திருமணம் நடந்தால் போலீசாருக்கு உடனடியாக தகவல் தரவேண்டும்.

குழந்தைகளை நல்ல முறையில் படிக்க வைத்து, 25 வயதுக்கு மேல் திருமணம் செய்து கொடுத்தால், அவர்களது வாழ்க்கை சிறப்பாக அமையும். கொல்லிமலை முழுவதும் குழந்தை திருமணத்தை தடுக்க போலீசார் கண்காணிக்ப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற தவறு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். திரளான உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Updated On: 22 July 2021 4:00 AM GMT

Related News

Latest News

  1. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  4. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  8. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  9. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...
  10. நாமக்கல்
    திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிர் பாதிப்பு: இழப்பீடு...