/* */

வெண்ணந்தூர் அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: இளம்பெண் தற்கொலை

வெண்ணந்தூர் அருகே காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், மனமுடைந்த இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

HIGHLIGHTS

வெண்ணந்தூர் அருகே காதலுக்கு பெற்றோர்  எதிர்ப்பு: இளம்பெண் தற்கொலை
X

ராசிபுரம் தாலுக்கா, வெண்ணந்தூர் அருகே அலவாய்ப்பட்டி பஞ்சாயத்து, ஆண்டிவலசு பகுதியில் பழனியப்பன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணறு உள்ளது. அந்த கிணற்றில், இளம்பெண்ணின் உடல் சடலமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக ராசிபுரம் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி இளம்பெண்ணின் உடலை மீட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வெண்ணந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி அங்கு சென்று விசாரணை நடத்தினார். போலீஸ் விசாரணையில், கிணற்றில் சடலமாக மிதந்தது நடுப்பட்டி கிராமம், நரிக்கல் காடு பகுதியை சேர்ந்த ராஜி மகள் அஞ்சலை ( 19) என்பது தெரியவந்தது.

போலீஸ் விசாரணையில் அஞ்சலை பிளஸ்-2 வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். அவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்தார். ஆனால் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மனமுடைந்த அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்தது கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 4 April 2022 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  3. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  4. வீடியோ
    Road- ட கூறுபோட்ட நாட்டையும் கூறுபோட்டு வித்துடுவ !#seeman...
  5. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  6. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  7. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  8. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  10. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....