/* */

ராசிபுரத்தில் வாகனக் கடன் செலுத்தாத ஆட்டோ உரிமையாளருக்கு சிறை

தனியார் நிதி நிறுவனத்தில் வாகனக் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாததால் ஆட்டோ உரிமையாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

HIGHLIGHTS

ராசிபுரத்தில் வாகனக் கடன் செலுத்தாத ஆட்டோ உரிமையாளருக்கு சிறை
X
பைல் படம்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுக்கா, வெண்ணந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் மாரிமுத்து. இவர் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் வாகன கடன் பெற்று சரக்கு ஆட்டோ வாங்கி ஓட்டி வந்தார். அவர் கடன் தொகையை திருப்பிச் செலுத்தவில்லை.

இதனையடுத்து தனியார் நிதி நிறுவனத்தினர் கடன் பாக்கி ரூ.11,98,159/- ஐ வசூல் செய்வதற்காக மாரிமுத்துவுக்கு எதிராக நாமக்கல் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணைக்கு மாரிமுத்து கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதையொட்டி, அவரை கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

பிடியாணையின் பேரில் போலீசாரால் கைது செய்யப்பட்ட மாரிமுத்து கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டார். பின்னர் நீதிபதி உத்தரவின் பேரில் மாரிமுத்து திருச்சி சிவில் சிறையில் அடைக்கப்பட்டார்.

Updated On: 27 Sep 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அழகான புள்ளிமானே, உனக்காக அழுதேனே! - உறவுகளின் வலிகள் மேற்கோள்கள்
  2. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  3. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!
  5. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  8. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  9. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்