/* */

வட மாநிலங்களில் பாஜக வெற்றி: நாமக்கல் மாவட்ட பாஜகவினர் கொண்டாட்டம்

வட மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளதை அடுத்து, நாமக்கல் மாவட்ட பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

HIGHLIGHTS

வட மாநிலங்களில் பாஜக வெற்றி: நாமக்கல் மாவட்ட பாஜகவினர் கொண்டாட்டம்
X

வட மாநிலங்களில் பாஜக வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, இராசிபுரத்தில், மாவட்ட பாஜக தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.

உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதை முன்னிட்டு, நாமக்கல் மாவட்ட பாஜக சார்பில், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டன.

ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட பாஜக தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். பாஜகவினர் பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்கள், பஸ் பயணிகள் உள்ளிட்டோருக்கு இனிப்புகள் வழங்கியும், வெற்றியைக் கொண்டாடினர்.

பொதுச்செயலாளர் சேதுராமன், ராசிபுரம் நகர பொறுப்பாளர் வேலு, மாவட்ட பாஜக நிர்வாகிகள் வக்கீல் குமார், லோகேந்திரன், சித்ரா, ஹரிஹரன், ராம்குமார், குமார் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், திருச்செங்கோடு, மங்களபுரம், முள்ளுக்குறிச்சி, பரமத்தி-வேலூர் உள்ளிட்ட பகுதிகளிலும், மாவட்ட பாஜக சார்பில், தேர்தல் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Updated On: 10 March 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் கோடைகால நீச்சல் பயிற்சி
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இருந்து ஜவ்வாதுமலைக்கு இயற்கை சுற்றுலா
  3. நாமக்கல்
    ராஜவாய்க்காலில் திடீரென தண்ணீர் நிறுத்தம்; விவசாயிகள் கடும் பாதிப்பு
  4. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் முன்பு வணிக வளாக வழக்கு, சிறப்பு...
  5. நாமக்கல்
    பிரதமர் மோடி தேர்தல் பிரச்சார பேச்சைக் கண்டித்து மகளிர் காங்கிரசார்...
  6. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.2.23 கோடி
  7. நாமக்கல்
    நாமக்கல் அருகே பட்டப் பகலில் வீட்டுக்குள் புகுந்து ரூ. 17 லட்சம்...
  8. தமிழ்நாடு
    திருவண்ணாமலை To சென்னை கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே!
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே வேலை வாங்கித் தருவதாக மோசடி: தலைமறைவு நபர் 2...
  10. ஈரோடு
    அத்தாணி அருகே தீர்த்தம் எடுக்க வந்த போது பவானி ஆற்றில் மூழ்கி இருவர்...