/* */

பரமத்திவேலூரில் மகா மாரியம்மன் கோயில் பாலாபிஷேக விழா

பரமத்திவேலூர் மகா மாரியம்மன் கோயில் பங்குனி விழாவில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பரமத்திவேலூரில் மகா மாரியம்மன் கோயில் பாலாபிஷேக விழா
X

பரமத்திவேலூர் மகா மாரியம்மன் கோயில் பங்குனி விழாவில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பாலாபிஷேக விழா நடைபெறும். இந்த ஆண்டு மகா மாரியம்மன் கோயிலில் பாலாபிஷேக விழா நடந்தது.

இதையொட்டி பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி, தீர்த்த குடங்கள் மற்றும் பால் குடங்களுடன் ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். பின்னர் மகா மாரியம்மனுக்கு பால் மற்றும் புனித தீர்த்தங்களால் அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெற்றன.

இதனைத்தொடர்ந்து மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மகா மாரியம்மன் கோவில் பால்குட அபிஷேக விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Updated On: 11 April 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  6. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  7. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  8. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  9. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  10. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை