/* */

பரமத்திவேலூர் சக்தி விநாயகர் கோயிலில் மண்டல பூஜை நிறைவு: 108 சங்காபிசேகம்

பரமத்திவேலூர் சக்தி விநாயகர் கோயில் மண்டல பூஜை நிறைவு விழாவை முன்னிட்டு 108 சங்காபிசேகம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பரமத்திவேலூர் சக்தி விநாயகர் கோயிலில் மண்டல பூஜை நிறைவு: 108 சங்காபிசேகம்
X

பரமத்திவேலூர் சக்தி விநாயகர் கோயிலில் மண்டல பூஜை நிறைவு விழாவை முன்னிட்டு 108 சங்காபிசேகம் நடைபெற்றது.

பரமத்திவேலூர், சக்தி நகரில் பிரசித்தி பெற்ற சக்தி விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று சமீபத்தில் கும்பாபிசேம் நடைபெற்றது. இதையொட்டி 48 நாட்கள் மண்டல பூஜைகள் நடைபெற்றன.

மண்டல பூஜை நிறைவு விழாவை முன்னிட்டு கணபதி ஹோமம் மற்றும் லட்சார்ர்ச்சணை நடைபெற்றது. தொடர்ந்து 9 கலசங்கள் வைக்கப்பட்டு சக்தி விநாயகருக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக திரளான பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து ஊர்வலமாக வந்து சக்தி விநாயகருக்கு அபிஷேகம் செய்தனர்.

மாலையில் சிவாச்சாரியார்கள் ஸ்ரீதர், செல்வபரணி மற்றும் குழுவினர் வேத மந்திரங்கள் முழங்க யாக வேள்விகள் ஹோமங்கள் நடைபெற்றது. தொடர்ந்து மூலிகை திரவியங்கள் மற்றும் பால், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், சந்தனம், திருமஞ்சனம் அபிஷேகங்கள் செய்யப்பட்டு, அடுக்கு மற்றும் கும்ப தீபாராதணை நடைபெற்றது.

பின்னர் சுவாமிக்கு வெள்ளிக்கவசம் சார்த்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா மதிவானன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Updated On: 14 Oct 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  2. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...
  3. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  4. வீடியோ
    கொள்ளையடிக்க திட்டமிடும் Congress ! பாஜக நடக்கவிடாது !#congress #bjp...
  5. வீடியோ
    ஆந்திராவில் ஆரம்பித்த நில புரட்சி பூதானம் பஞ்சமி போன்றது !#Rsrinivasan...
  6. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  7. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  8. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  9. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  10. நாமக்கல்
    சுத்தமான இறைச்சி மட்டுமே பயன்படுத்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர்...