பரமத்திவேலூர் அருகே கார் கவிழ்ந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு, 3 பேர் படுகாயம்
Car Accident Today -பரமத்திவேலூர் அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு, 3 பேர் படுகாயமடைந்தனர்.
HIGHLIGHTS
Car Accident Today -சேலம் பகுதியைச் சேர்ந்தவர் சசீந்திரன் (32), நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வேலு (28). வீசாணம் பகுதியை சேர்ந்தவர் ராஜூ (37). இவர்கள் 3 பேரும் தூத்துக்குடியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் தியாகராஜன் (28). இவர் 3 பேரின் அறையில் தங்கி டி.என்.பி.சி. தேர்வுக்கு படித்து வந்தார். இவர்கள் 4 பேரும் விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்கு சென்று விட்டு மீண்டும் தூத்துக்குடி செல்ல சுசீந்திரனுக்கு சொந்தமான காரில் சென்றுகொண்டிருந்தனர்.
நாமக்கல்லில் இருந்து கரூர் செல்லும் பைபாஸ் ரோட்டில், பரமத்திவேலூர் அனிச்சம்பாளையம் பிரிவு ரோடு அருகே சென்றபோது சாலையை கடக்க முயன்றவர் மீது மோதாமல் இருப்பதற்காக காரை ஓட்டிய சுசீந்திரன் பிரேக் போட்டுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டோரம் இருந்த, 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த 4 பேரையும் அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு ப.வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தியாகராஜன் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். மற்ற 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ப.வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2