/* */

ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் எஸ்எஸ்ஐ விஷம் குடித்து தற்கொலை முயற்சி

ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற எஸ்எஸ்ஐ மயங்கி விழுந்து, ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுள்ளார்.

HIGHLIGHTS

ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் எஸ்எஸ்ஐ விஷம் குடித்து தற்கொலை முயற்சி
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூரை சேர்ந்தவர் நீலகண்டன். இவர் ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் கடந்த 11 மாதங்களாக எஸ்எஸ்ஐ ஆக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காலை போலீஸ் நிலையத்திற்கு வந்த நீலகண்டன், ஒரு வழக்கு தொடர்பாக வெளியே சென்று விட்டு மீண்டும் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். சிறிது நேரத்தில் அவர் போலீஸ் நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்தார். இதைப் பார்த்த மற்ற போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

அவரை மீட்டு நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது, நீலகண்டன் விஷம் குடித்து விட்டு போலீஸ் நிலையத்துக்கு வந்து மயங்கி விழுந்தது தெரியவந்தது. அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விஷம் குடித்து விட்டு போலீஸ் நிலையத்திற்கு வந்த எஸ்எஎஸ்ஐ மயங்கி விழுந்த சம்பவம் போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 17 Jun 2022 3:00 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  4. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  7. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  10. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!