/* */

தென்னையில் வெள்ளை ஈ தாக்குதலால் மகசூல் பாதிப்பு: இழப்பீடு வழங்க கோரிக்கை

தென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த ஒட்டுண்ணி அட்டை வழங்கவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும் வேண்டுகோள்.

HIGHLIGHTS

தென்னையில் வெள்ளை ஈ தாக்குதலால் மகசூல் பாதிப்பு: இழப்பீடு வழங்க கோரிக்கை
X

பைல் படம்.

இதுகுறித்து தமிழ்நாடு, விவசாய முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலார் பாலசுப்பிரமணியன், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் 37 மாவட்டங்களில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல் மிக அதிக அளவில் உள்ளது. ஆங்காங்கே தென்னை மரங்கள் முழுவதுமாக காயத் தொடங்கியுள்ளன. இது விவசாயிகளுக்கு பெருத்த இழப்பை ஏற்படுத்தி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்காக வேளாண்மைத் துறையின் மூலம் குறைந்த அளவே ஒட்டுண்ணி அட்டை விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

போதுமான ஒட்டுண்ணி அட்டைகள் கிடைக்காததால் அதிக விலை கொடுத்து பூச்சிக்கொல்லி மருந்துகளை விவசாயிகள் வாங்க வேண்டிய நிலை உள்ளது. எனினும், எந்தவிதமான பயனும் இதுவரை ஏற்படவில்லை. வேளாண்மைத்துறை வல்லுநர்கள் பூச்சி மருந்துகளை வெள்ளை ஈக்களுக்கு பயன்படுத்தும் போது அதிக அளவில் வெள்ளை ஈக்கள் பெருகுவதாக தெரிவிக்கின்றனர்.

இதனால் தென்னை விவசாயிகளுக்கு ஒட்டுண்ணி அட்டைகளை பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. இந்நிலை நீடித்தால் தென்னைமரங்கள் தமிழகத்தில் முழுவதுமாக காய்ந்துவிடும் அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே வெள்ளை ஈ யினை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு உடனடியாக ஒட்டுண்ணி அட்டைகளை தயாரித்து, அனைத்து தென்னை விவசாயிகளுக்கும் தேவையான அளவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல் பாதிக்கப்பட்ட இடங்களை வருவாய் துறை மற்றும் வேளாண்மை துறையின் மூலம் கணக்கெடுப்பு செய்து, பாதிக்கப்பட்டதென்னை விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 22 Feb 2022 12:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  2. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  3. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  4. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  5. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  6. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  7. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  8. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  10. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு