Begin typing your search above and press return to search.
வடுகப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளிக்கு கலெக்டர் கேடயம் வழங்கிப் பாராட்டு
சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்ட, வடுகப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளிக்கு, மாவட்ட கலெக்டர் கேடயம் வழங்கிப் பாராட்டினார்.
HIGHLIGHTS
ஒவ்வொரு ஆண்டும் தேசிய திறனாய்வுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் இத்தேர்வில் கலந்துகொண்டு தேர்வு எழுதுகின்றனர். நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம் வடுகப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் ஆண்டுதோறும், திறனாய்வுத்தேர்வில் அதிக அளவில் தேர்ச்சி பெற்று வருகின்றனர். இதையொட்டி இப்பள்ளி சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த பள்ளியைப் பாராட்டி நாமக்கல்லில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், கலெக்டர் ஸ்ரேயாசிங், இப்பள்ளி தலைமை ஆசிரியை கவிதாவிற்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.