/* */

நாமக்கல்லில் குடிநீர் குழாய் அமைக்க தோண்டிய பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து

நாமக்கல்லில் குடிநீர் குழாய் அமைக்க தோண்டிய பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. டிரைவர் மருத்துவமனையில் அனுமதி.

HIGHLIGHTS

நாமக்கல்லில் குடிநீர் குழாய் அமைக்க தோண்டிய பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து
X

நாமக்கல் சின்னமுதலைப்பட்டி பகுதியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில்  கவிழ்ந்து விபத்துக்குள்ளான லாரி.

கோழிப்பண்ணைகளுக்கு தேவையான மக்காச்சோளம், சோயா புண்ணாக்கு, தவிடு உள்ளிட்ட மூலப்பொருட்கள் வடமாநிலங்களில் இருந்து சரக்கு ரயில் மூலம் கொண்டுவரப்பட்டு, நாமக்கல் ரயில் நிலையத்தில் இறக்கி லாரிகள் மூலம் கோழிப்பண்ணைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்தநிலையில், சட்டீஸ்கர் மாநிலத்தில் இருந்து எண்ணெய் எடுக்கப்பட்ட புண்ணாக்கு ரயில் மூலம் நாமக்கல் வந்தது. நாமக்கல் ரயில் நிலையத்தில் இருந்து லாரிகளில் லோடு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட கோழிப்பண்ணைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் ஓரு லாரி அதிகாலை 2.30 மணியளவில், நாமக்கல்–சேலம் ரோட்டில் என்.ஜி.ஜி.ஓ காலனி வழியாக சிலுவம்பட்டிக்கு சென்றது.

சின்னமுதலைப்பட்டி பகுதியில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டிய பள்ளத்தில் அந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் லாரியை ஓட்டி வந்த ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த லாரி டிரைவர் ரகு (25) என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு, தனியார் ஆஸ்பத்தரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். லாரி கவிழ்ந்ததை அடுத்து அப்பகுதியில் இருந்த பள்ளம் அவசர அவசரமாக மூடப்பட்டது.

Updated On: 5 Dec 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மதுரை அருகே பாலமேட்டில் ஆட்டோ ஓட்டுநர் நல சங்கம் சார்பில் மே தின விழா
  2. நாமக்கல்
    நான் முதல்வன் திட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்தவருக்கு...
  3. ஈரோடு
    வீட்டு முன் மரம் நட்டினால் வரி சலுகை: அமைச்சர் முத்துசாமி தகவல்
  4. திருப்பரங்குன்றம்
    மதுரை யானைமலை ஒத்தக்கடை அருகே முதுமை தடுப்பு இலவச பொது மருத்துவ
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரி இலவச தொழிற்பயிற்சி
  6. நாமக்கல்
    தேர்தல் கமிஷன் விதிமுறைகளுக்கு உட்பட்டு தண்ணீர் பந்தல் திறக்க அனுமதி
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே திருப்பரங்குன்றத்தில் திமுக சார்பில் நீர்மோர் பந்தல்...
  8. காங்கேயம்
    விதிமுறைகளை மீறினால் தெருக்குழாய் அகற்றப்படும்; வெள்ளக்கோவில் நகராட்சி...
  9. திருவள்ளூர்
    வீட்டை விட்டு துரத்தியதாக முதியவர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
  10. சோழவந்தான்
    மதுரை அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்த நாள் விழா