/* */

பக்தர்கள் கூடுவதை தடுக்க நாமக்கல் மாவட்டத்தில் கோயில்கள் மூடல்

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கலெக்டர் பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து நாமக்கல் ஸ்ரீ ஆஞ்நேயர் கோயில் உள்ளிட்ட கோயில்கள் மூடப்பட்டன

HIGHLIGHTS

பக்தர்கள் கூடுவதை தடுக்க  நாமக்கல் மாவட்டத்தில் கோயில்கள் மூடல்
X

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்து கலெக்டர் பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து நாமக்கல் ஸ்ரீ ஆஞ்நேயர் கோயில் உள்ளிட்ட கோயில்கள் மூடப்பட்டன.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் கெரோனா பரவலை தடுக்கும் வகையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில், அரசால் அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகுளுடன் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஆக.1, 2, 3 ஆகிய நாட்களில் வரும் ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி கிருத்திகை போன்ற பண்டிகைகளை முன்னிட்டு, பக்தர்கள் அதிக அளவில் கூடுவதை தடுப்பதற்காக, அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜை, பொங்கல் வைபவம், வழிபாடு, நேர்த்திக்கடன் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்படுகிறது. மேலும், நீர் வீழ்ச்சிகள், ஆறுகள், குளங்கள், கால்வாய்கள் உள்ளிட்ட எந்த நீர்நிலைகளிலும் குளிப்பதற்கும் தடை விதிக்கப்படுகிறது.

கோயில்களில் வழக்கமான பூஜைகள் மட்டும் நடைபெறும். மிக முக்கிய பூஜைகள் இண்டர்நெட் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் உத்தரவைத்தொடர்ந்து நாமக்கல்லில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில், நரசிம்மர் சுவாமி கோயில், நாமகிரியம்மன் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்கள் மூடப்பட்டுள்ளன. இங்கு ஆக.1, 2, 3ஆகிய 3 நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Updated On: 1 Aug 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மத்திய சிறை அருகே கைதிகள் நடத்த போகும் பெட்ரோல் பங்க்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்ற என் கல்லூரிக்கனவு நிகழ்ச்சி
  3. கவுண்டம்பாளையம்
    கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றியுள்ள பகுதி ரெட் ஜோனாக அறிவிப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    வில்லன் இல்லைன்னா கதையே இல்லை..!
  5. இந்தியா
    நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு மீண்டும் கப்பல்...
  6. லைஃப்ஸ்டைல்
    பனை நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  7. இந்தியா
    விஜயகாந்த்துக்கு மே 9ம் தேதி பத்மபூஷன் விருது: பிரேமலதா தகவல்
  8. அரசியல்
    சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட ரூ.4 கோடி தொடர்பான வழக்கு
  9. லைஃப்ஸ்டைல்
    இனிப்பு பெருஞ்சீரகம் செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    அப்பா ஒரு ஆழ்கடல்..! கன்னட மொழியில் அப்பா மேற்கோள்..!