/* */

நாமக்கல்லில் ஆசிரியர் மீது பாலியல் புகார்: உள்ளிருப்பு போராட்டத்தால் பரபரப்பு

நாமக்கல்லில் ஆசிரியர் மீது பெற்றோர்கள் பாலியல் புகாரளித்ததால் ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் ஆசிரியர் மீது பாலியல் புகார்: உள்ளிருப்பு போராட்டத்தால் பரபரப்பு
X

பைல் படம்.

நாமக்கல் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக, பெற்றோர்கள் மாவட்ட சிஇஓவிடம் புகார் அளித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு பள்ளி வளாகத்தில் ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு, பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகவும், இதனால் 10ம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்றதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக வேண்டும் என்று சில பெற்றோர்கள் மாவட்ட சிஇஓ மகேஸ்வரியிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

இந்தநிலையில் மாணவி எழுப்பியுள்ள புகார் உண்மையில்லை. உள்நோக்கத்தோடு புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் இன்று மாலை பள்ளி வேலை நேரம் முடிந்ததும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டம் இரவு 8 மணியைக் கடந்தும் நீடித்து வருகிறது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 6 Dec 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  3. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  4. வீடியோ
    Road- ட கூறுபோட்ட நாட்டையும் கூறுபோட்டு வித்துடுவ !#seeman...
  5. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  6. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  7. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  8. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  10. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....