அரசு போக்குவரத்து கழகத்தில் 15 ஆண்டுகளாக வழங்காத வாரிசு வேலை வழங்க தீர்மானம்
15 ஆண்டுக்கு மேலாக வழங்காமல் உள்ள வாரிசு வேலையினை உடனடியாக வழங்க வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
HIGHLIGHTS
அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் சார்பில், டிஏ உயர்வு மீட்பு குழு ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. குழு நிர்வாகி மாரிமுத்து தலைமை வகித்தார். நிர்வாகிகள் கதிரேசன், மருதமுத்து, ராகவேந்திரன் ஆகியோர் கோரிக்கை குறித்து விளக்கினர். கூட்டத்தில், 79 மாத அகவிலைப்படி நிலுவையை அரசு உடனடியாக வழங்க வேண்டும். குறைவாக பெறும் பென்சனில், ரூ. 350 பிடித்தம் செய்யப்படாமல் மருத்து இன்சூரன்ஸ் திட்டம் வழங்க வேண்டும். கடந்த, மே மாதம் வரை ஓய்வு பெற்ற அனைவருக்கும், இறந்த பணியாளர்கள் குடும்பத்தினருக்கும், ஓய்வு கால பணப்பயன்களை உடனடியாக வழங்க வேண்டும். 15 ஆண்டுக்கு மேலாக வழங்காமல் உள்ள வாரிசு வேலையினை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பென்சன் தொகையை அரசு கருவூலம் வழியாக வழங்க வேண்டும். ஊதிய ஒப்பந்த பணப்பயன்களை, ஓய்வு பெற்ற அனைவருக்கும், நிலுவை தொகையுடன் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.