வடமாநில தொழிலாளர் குறித்து போலீஸ் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டுகோள்
Egg Poultry Farm- வடமாநில தொழிலாளர் குறித்து போலீஸ் நிலையத்தில் பதிவு செய்ய கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
HIGHLIGHTS
Egg Poultry Farm- நாமக்கல் மாவட்ட கோழிப்பண்ணைகளில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்கள் குறித் விபரங்களை போலீஸ் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று பண்ணையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் சிங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்ட தொழிலாளர் துறை உதவி கமிஷனர் அறிவுரைப்படி, மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணையாளர்கள், தங்கள் பண்ணைகளில் பணிபுரியும், வெளிமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி, அவர்களுடைய விபரங்களை ஆதார் எண்ணுடன், அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் பதிவு செய்து கொள்ளவேண்டும். 18 வயது நிரம்பாத குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தக் கூடாது. குடும்பத்துடன் பணியில் இருந்தாலும் அவர்களின் குழந்தைகள் பணி செய்ய அனுமதிக்க வேண்டாம். தொழிலாளர் துறையின் அறிவுரைகளை அனைத்து பண்ணையாளர்களும் முறையாக பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2