சமூக வலைதளங்களில் பரவும் வேலை வாய்ப்பு செய்தி பொதுமக்கள் ஏமாற வேண்டாம்: கலெக்டர்
வாட்ஸ் ஆப், சமூக வலைதளங்களில் பரவும் வேலைவாய்ப்பு விளம்பரங்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என நாமக்கல் கலெக்டர் எச்சரித்துள்ளார்.
HIGHLIGHTS
இதுகுறித்து, நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
வாட்ஆப் உள்ளிட்ட சோசியல் மீடியாக்களில், கூட்டுறவு சங்கங்களின் மூலம் மேலாளர், துணை மேலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு ரூ. 18 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை சம்பளத்துடன் சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு மாவட்டங்களில் உள்ள வங்கிகளில் பணியிடங்கள் வழங்கப்படும் என்றும், அதற்காக, டெபாசிட் தொகை ரூ. 1 லட்சம் செலுத்தினால் வேலை கிடைக்கும் என போலி விளம்பரம் வெளியாகி வருகின்றன. கூட்டுறவுத்துறை மூலம், மேற்படி பணியிடங்கள் வழங்குவதற்கான அறிவிப்புகள் எதுவும் முறையாக வெளியிடப்படவில்லை. பொதுமக்கள், இதுபோன்ற பொய்யான விளம்பரங்களை நம்ப வேண்டாம். டெபாசிட் தொகை என்ற பெயரில், தொகையை செலுத்தி ஏமாற வேண்டாம். இது குறித்து தவறான செய்திகளை பரப்புவோர் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.