/* */

சமூக வலைதளங்களில் பரவும் வேலை வாய்ப்பு செய்தி பொதுமக்கள் ஏமாற வேண்டாம்: கலெக்டர்

வாட்ஸ் ஆப், சமூக வலைதளங்களில் பரவும் வேலைவாய்ப்பு விளம்பரங்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என நாமக்கல் கலெக்டர் எச்சரித்துள்ளார்.

HIGHLIGHTS

சமூக வலைதளங்களில் பரவும் வேலை வாய்ப்பு செய்தி பொதுமக்கள் ஏமாற வேண்டாம்: கலெக்டர்
X

ஸ்ரேயாசிங், நாமக்கல் கலெக்டர்.

இதுகுறித்து, நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

வாட்ஆப் உள்ளிட்ட சோசியல் மீடியாக்களில், கூட்டுறவு சங்கங்களின் மூலம் மேலாளர், துணை மேலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு ரூ. 18 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை சம்பளத்துடன் சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு மாவட்டங்களில் உள்ள வங்கிகளில் பணியிடங்கள் வழங்கப்படும் என்றும், அதற்காக, டெபாசிட் தொகை ரூ. 1 லட்சம் செலுத்தினால் வேலை கிடைக்கும் என போலி விளம்பரம் வெளியாகி வருகின்றன. கூட்டுறவுத்துறை மூலம், மேற்படி பணியிடங்கள் வழங்குவதற்கான அறிவிப்புகள் எதுவும் முறையாக வெளியிடப்படவில்லை. பொதுமக்கள், இதுபோன்ற பொய்யான விளம்பரங்களை நம்ப வேண்டாம். டெபாசிட் தொகை என்ற பெயரில், தொகையை செலுத்தி ஏமாற வேண்டாம். இது குறித்து தவறான செய்திகளை பரப்புவோர் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.

Updated On: 27 July 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  6. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  7. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  8. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  9. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  10. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை