/* */

ஒருவந்தூரில் செயற்கை நீரூற்றுடன் கூடிய காளை மாட்டு சிலை திறப்பு விழா

ஒருவந்தூர் கிராமத்தில் செயற்கை நீரூற்றுடன் கூடிய காளை மாடு சிலை திறப்பு விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

ஒருவந்தூரில் செயற்கை நீரூற்றுடன் கூடிய காளை மாட்டு சிலை திறப்பு விழா
X

மோகனூர் ஊராட்சி ஒன்றியம், ஒருவந்தூரில் செயற்கை நீரூற்றுடன் கூடிய காளை மாட்டு சிலை திறக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஒன்றியம், ஒருவந்தூரில் கிராம பஞ்சாயத்து சார்பில், முன்னாள் மோகனூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணன் நினைவாக, ரூ.4 லட்சம் மதிப்பில் செயற்கை நீரூற்றுடன் கூடிய காளை மாடு சிலை மற்றும் சாலையோரப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா, ஒருவந்தூர் நீரேற்று பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் செல்லராசாமணி தலைமையில் நடைபெற்றது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் பாலசுப்ரமணியன் வரவேற்றார்.

டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் வக்கீல் பாலுசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் கிருஷ்ணன் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பூங்காவை திறந்து வைத்தார்.

ஒருவந்தூர் பஞ்சாயத்து தலைவர் அருணா காளை மாட்டு சிலையை திறந்து வைத்தார். ரியல் எஸ்டேட் உரிமையாளர் கார்த்திகேயன், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ருத்ராதேவி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 15 Jan 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  2. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...
  3. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  4. வீடியோ
    கொள்ளையடிக்க திட்டமிடும் Congress ! பாஜக நடக்கவிடாது !#congress #bjp...
  5. வீடியோ
    ஆந்திராவில் ஆரம்பித்த நில புரட்சி பூதானம் பஞ்சமி போன்றது !#Rsrinivasan...
  6. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  7. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  8. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  9. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  10. நாமக்கல்
    சுத்தமான இறைச்சி மட்டுமே பயன்படுத்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர்...