தேசிய அளவிலான விளையாட்டு போட்டி: மாநில அளவிலான தேர்வில் பங்கேற்க அழைப்பு
தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள, மாநில அளவிலான தேர்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
2021 ம் ஆண்டின் 18 வயதிற்கு உட்பட்டோருக்கான கேலோ இந்தியா இளையோர் தேசிய விளையாட்டுப் போட்டிகள் வரும் 2022ம் ஆண்டு பிப்ரவரி 5 ம் தேதி முதல் 14ம் தேதி வரை ஹரியானா மாநிலத்தில் நடைபெறுகிறது. அதற்கான மாநில அளவிலான கூடைப்பந்து தேர்வு போட்டி ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்கும் வரும் நவம்பர்1ம் தேதி காலை 6.30 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டரங்கத்தில் நடைபெறுகிறது. இத்தேர்வு போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் பள்ளியின் போனபைட் சான்றிதழ், வயது சான்றிதழ், அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ள போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை, பாஸ்போர்ட் அளவு போட்டோ உள்ளிட்ட ஆவணங்களை எடுத்துச் சென்று தேர்வு போட்டியில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.