/* */

நாமக்கல்: கிணற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிவாரணம்

கிணற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு, முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து 1 லட்சம் ரூபாயை கலெக்டர் வழங்கினார்.

HIGHLIGHTS

நாமக்கல்: கிணற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவரின்  குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிவாரணம்
X

பரமத்தி அருகே கிணற்றி மூழ்கி உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு, ரூ.1 லட்சம் நிவாரண உதவியை கலெக்டர் ஸ்ரேயாசிங் வழங்கினார்.

கிணற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு, முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து ரூ.1 லட்சம் உதவியை கலெக்டர் வழங்கினார்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார். கூட்டத்தில், பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 255 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார்கள். அவற்றை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி விரைவாக நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். அலுவலக தரை தளத்தில், மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து மனுக்களைப் பெற்றார்.

ப.வேலூர் தாலுக்கா, கூடச்சேரி கிராமத்தை சேர்ந்த, மாணவர் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தார். இதையொட்டி, முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.1 லட்சத்திற்கான காசோலையை, மாணவனின் தந்தை நாகராஜிடம் கலெக்டர் வழங்கினார். டிஆர்ஓ கதிரேசன், சமூக பாதுகாப்புத்திட்ட சப் கலெக்டர் தேவிகாராணி உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Updated On: 26 April 2022 1:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  3. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  4. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  5. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  7. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  9. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....
  10. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!