Begin typing your search above and press return to search.
விடுமுறை தினத்தை முன்னிட்டு ஒரே நாளில் கோடிக்கணக்கில் மதுபானங்கள் விற்பனை..!
நாமக்கல் மாவட்டத்தில், விடுமுறை தினத்தை முன்னிட்டு ஒரு நாளில் மட்டுமே ரூ.5கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.5 கோடி மதிப்பிலான மதுபானங்கள் விற்பனை நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் 189 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. இந்த கடைகளில், தினசரி ரூ.1.5 கோடிக்கு மது விற்பனை நடைபெறும். புத்தாண்டு, பொங்கல், தீபாவளி உள்ளிட்ட விஷேச நாட்களிலும், டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் நாட்களுக்கு முந்தைய நாட்களிலும் வழக்கத்தைவிட மதுபானங்களின் விற்பனை அதிக அளவில் நடைபெறும். இதனிடையே மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஏப்.14ம் தேதி டாஸ்மாக் கடைகளை அடைக்க அரசு உத்தரவிட்டது. இதையொட்டி அதற்கு முதல்நாளான ஏப்.13ம் தேதியன்று மதுப்பிரியர்கள் அதிகளவில் மதுபாட்டில்களை வாங்கி இருப்பு வைத்தனர். இதனால் 13ம் தேதி ஒரே நாளில் ரூ.5 கோடி மதிப்பில் மதுபானங்கள் விற்பனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.