/* */

நூல் விலையைக் குறைக்க நடவடிக்கை: மத்திய அமைச்சரிடம் கொமதேக ஈஸ்வரன் கோரிக்கை

நூல் விலையைக் குறைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய ஜவுளித்துறை அமைச்சரிடம், கொமதேக ஈஸ்வரன் எம்எல்ஏ நேரில் கோரிக்கை.

HIGHLIGHTS

நூல் விலையைக் குறைக்க நடவடிக்கை:  மத்திய அமைச்சரிடம் கொமதேக ஈஸ்வரன் கோரிக்கை
X

மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஸ் கோயலிடம், கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்எல்ஏ, நாமக்கல் எம்.பி சின்ராஜ் ஆகியோர் மனு அளித்தனர்.

நூல் விலை உயர்வால் ஏற்படுகின்ற பாதிப்புகள் குறித்து விசைத்தறியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சார்பாக, கொமதேக பொதுச்செயலாளரும், திருச்செங்கோடு எம்எல்ஏவுமான ஈஸ்வரன், நாமக்கல் எம்.பி சின்ராஜ் ஆகியோர், புதுடில்லியில், மத்திய ஜவுளித் துறை அமைச்சர் பியூஸ் கோயலை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியுள்ளதாவது:

கடந்த இரண்டு மாதங்களாக, கட்டுப்பாடு இல்லாமலும், எதிர்பாராமலும், கடும் நூல் விலை உயர்வால், ரெடிமேட் ஆடை ஏற்றுமதியாளர்களும், விசைத்தறியாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு, தொழில் முடங்கியுள்ளது. வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு ஒப்பந்தம் செய்த ரெடிமேடு ஆடை மற்றும் இதர ஜவுளி பொருட்களை தயாரிக்க முடியாமல் தினறி வருகின்றனர். மேலும் தொழிலை எப்படி தொடர்வது என்று தெரியாமல் தவிக்கின்றனர். அரசாங்கத்தின் கட்டுப்பாடு இல்லாத ஏற்றுமதியும், உள்நாட்டு தேவைகளை கவனத்தில் கொள்ளாமல் அனுமதிக்கப்படும் ஏற்றுமதியும் நூல் விலை ஏற்றத்திற்கான முக்கிய காரணங்களாக உள்ளன. கொரோனா காலகட்டத்தில் மூடப்பட்ட நூற்பாலைகளால் நூல் உற்பத்தி குறைந்ததும் இதற்கான காரணமாகும். பல வெளிநாடுகள் அவர்களின் ரெடிமேடு ஆடை தேவைகளுக்காக இந்தியாவை நோக்கி வரும்போது அதை ஒப்புக்கொண்டு செய்வதற்கான நம்பிக்கை ஜவுளித் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களிடம் தற்போது இல்லை.

இந்த நிலை தொடர்ந்தால் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும். மத்திய அரசு தாமதப்படுத்தாமல் இதற்கான தீர்வைக் கண்டு ஜவுளித் தொழிலைக் காப்பாற்ற வேண்டும். இதன் மூலம் கோடிக்கணக்கான ஏழை எளிய மக்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாக்க முடியும். மத்திய ஜவுளித்துறை அமைச்சர் உடனடியாக அனைத்து தொழில் சார்ந்த அமைப்புகளையும், அதிகாரிகளையும் அழைத்து பேசி நாட்டின் வளர்ச்சியையும் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தையும் உறுதிப்படுத்த வேண்டும். தமிழக முதல்வரும் நூல் விலை ஏற்றம் சம்பந்தமாக மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி இருக்கின்றார். நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து உடனடியாக நூல் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 8 Dec 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  2. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  3. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  4. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  5. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  6. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  7. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  8. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  9. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  10. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!