/* */

கல்வி நிறுவன வாகனங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வலியுறுத்தல்

தனியார் கல்வி நிறுவன வாகனங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று ஆர்டிஓ தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

கல்வி நிறுவன வாகனங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வலியுறுத்தல்
X

நாமக்கல் தெற்கு ஆர்டிஓ அலுவலகத்தில் நடைபெற்ற, தனியார் கல்வி நிறுவனங்களுக்கான, ஆலோசனைக் கூட்டத்தில், ஆர்டிஓ முருகன் பேசினார்.

பள்ளி குழந்தைகளின் நலன்கருதி ஒவ்வொரு ஆண்டும் பள்ளி திறப்பதற்கு முன்பு கல்வி நிறுவனங்களின் பஸ்கள் மற்றும் வேன்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆய்வு விரைவில் துவங்க உள்ளது. இதை முன்னிட்டு நாமக்கல் தெற்கு ஆர்டிஓ அலுவலகத்தில், தனியார் கல்வி நிறுவனங்களின் போக்குவரத்து பிரிவு பணியாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஆர்டிஓ முருகன் தலைமை வகித்துப் பேசியதாவது: புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி கல்வி நிறுவன வாகனங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் புதுப்பித்து சான்று பெற வேண்டும். அனைத்து கல்வி நிறுவன வாகனங்களிலும் ஜி.பி.எஸ் கருவி மற்றும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என கூறினார். நிகழ்ச்சியில் வாகனங்களை பாதுகாப்பாக இயக்குவது குறித்து விளக்கப்பட்டது. மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உமா மகேஸ்வரி, சரவணன், நேர்முக உதவியாளர் முருகன் மற்றும் தனியார் கல்வி நிறுவன போக்குவரத்து பிரிவு பணியாளர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Updated On: 18 May 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!
  2. வீடியோ
    சித்திரை திருவிழா தான் சனாதனம் ! இராம ஸ்ரீனிவாசன் வாக்குவாதம் !...
  3. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  4. நாமக்கல்
    ப.வேலூர் ஸ்ரீ சக்தி கண்ணனூர் புது மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா
  5. லைஃப்ஸ்டைல்
    முள்ளுக்குள் மலர்ந்த ரோஜா, அப்பா..!
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. லைஃப்ஸ்டைல்
    தூக்கமின்மைக்குத் தீர்வளிக்கும் உணவுகள்
  8. லைஃப்ஸ்டைல்
    அனுபவ வயல்களின் அறுவடை, முதிர்ச்சி..!
  9. ஆன்மீகம்
    அளவற்ற அன்பை அள்ளித் தருபவர் நபிகள் நாயகம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!