/* */

பொங்கலுக்கான இலவச வேட்டி, சேலை உற்பத்தியை உடனே துவக்க ஈஸ்வரன் கோரிக்கை

பொங்கலுக்கான இலவச வேட்டி, சேலை உற்பத்தியை உடனே துவக்க ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

பொங்கலுக்கான இலவச வேட்டி, சேலை உற்பத்தியை உடனே துவக்க ஈஸ்வரன் கோரிக்கை
X

ஈஸ்வரன் எம்.எல்.ஏ.

தமிழக அரச, பொங்கலுக்கு வழங்க வேண்டிய இலவச வேட்டி, சேலை தயாரிப்பு பணிகளை உடனடியாக துவக்க வேண்டும் என்று கொ.ம.தே.க. ஈஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழக அரசு உடனடியாக நூல் கொள்முதல் செய்து, பொங்கலுக்கான, இலவச வேட்டி, சேலை உற்பத்தியை துவக்க வேண்டும். ஜூன் மாதமே நூல் கொள்முதல் செய்து, உற்பத்தி தொடங்கினால் தான் பொங்கலுக்குள் வேட்டி, சேலை தயாரித்து வினியோகிக்க முடியும். கால தாதமதம் ஆனதால், சென்ற ஆண்டு பொங்கலுக்குள் அனைவருக்கும் இலவச வேட்டி, சேலை வினியோகிக்க முடியாமல் போனது. தாமதமாக பணியை ஆரம்பித்தால், உற்பத்தியை வேகப்படுத்தி, தரமும் சரியில்லாமல் போகும். கடந்த ஆண்டு பட்ஜெட்டில் தாமதமானதால் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது.

இந்த ஆண்டு அவை அனைத்தும் தவிர்க்கப்பட வேண்டும். கைத்தறித் துறை அதிகாரிகள் துரிதமாக செயல்படவேண்டும். நல்ல தரமான நூலை சரியான நேரத்தில் கொள்முதல் செய்தால், பாதி வேலை முடிந்துவிடும். அடித்தட்டு மக்களுக்கான திட்டம் இது. மனநிறைவோடு மக்கள் பொங்கலை கொண்டாடும் வகையில் சரியான நேரத்தில் உயரிய தரத்தோடு வேட்டி சேலைகள் வழங்கப்பட வேண்டும். இன்னும் தாமதப்படுத்தாமல் உடனடியாக உற்பத்தி நடைமுறைகள் துவங்கப்படவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 8 Aug 2022 7:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  2. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  4. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  6. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  7. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  8. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  9. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை