/* */

இ-சேவை மையம் அமைக்க விரும்புகிறீர்களா? அப்ப இது உங்களுக்குத்தான்!

இ சேவை மையம் அமைக்க விரும்புவோர்களுக்கு முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

HIGHLIGHTS

இ-சேவை மையம் அமைக்க விரும்புகிறீர்களா? அப்ப இது உங்களுக்குத்தான்!
X

நாமக்கல் மாவட்டத்தில் இ-சேவை மையம் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் அனைவருக்கும் இ-சேவை மையம் திட்டத்தின் கீழ் இ- சேவை மையம் அமைத்து நடத்த ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இண்டர்நெட் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப முடியும். இத்திட்டத்தை பற்றி கூடுதல் தகவல் பெறவும், இண்டர்நெட் மூலம் விண்ணப்பிக்கவும், டிஎன்இசேவை.டிஎன்.ஜிஓவி.இன் என்ற வெப்சைட் முகவரியை பயன்படுத்தலாம்.

இம்மாதம் 30ம் தேதி மாலை 4 மணி வரை மட்டுமே இண்டர்நெட் மூலம் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்ய இயலும். கிராமப்புறங்களில் இசேவை மையம் செயல்படுத்துவதற்கான விண்ணப்பக்க கட்டணம் ரூ.3,000 மற்றும் நகரப்புறத்திற்கான கட்டணம் ரூ.6,000 ஆகும்.

விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும். அருகிலுள்ள இ-சேவை மையங்களின் தகவல்களை முகவரி என்ற ஆண்ட்ராய்டு மொபைல் அப்ளிகேசனை பயன்படுத்திக் காணலாம். அல்லது டிஎன்இஜிஏ.இன் என்ற வெப்சைட் முகவரியிலும் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 18 Jun 2023 6:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  3. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  4. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  6. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  7. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  8. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  9. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  10. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...